
மதுரை சேர்ந்த ஜெயன்- மாரியம்மாள் தம்பதி பிழைப்புக்காக கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்காவனம் என்ற கிராமத்தில் குடியேறினர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், ஜெயன் சலவைத் தொழில் செய்து வருகிறார். தன்னுடைய உழைப்பாலும், நேர்மையாலும் சிங்காவனம் மக்களை கவர்ந்த ஜெயன் அனைவரின் அன்பையும் பெற்றார்.
இந்நிலையில் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஜெயனால், தொழிலை முன்னெடுத்து செய்ய முடியவில்லை. கடந்த ஆறு மாதங்களாகவே வீட்டுக்குள் முடங்கி கிடந்துள்ளது, வாரத்துக்கு இருமுறை டயாலிசிஸ் பண்ண வேண்டிய சூழலும் இருந்தது.
எனவே ஜெயனுக்கு உதவி செய்ய எண்ணிய கிராம மக்கள், நிதி திரட்ட முடிவு செய்தனர். ஜெயனின் உயிர் காக்கும் கமிட்டி என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி, 5 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
கோவில்களில் ஜெயனுக்கு உதவி செய்யக்கோரி அறிவிப்பு வெளியானது, கடந்த 15ம் திகதி விடுமுறை தினத்திலும் கையில் வாளியை ஏந்திக் கொண்டு கோட்டயம் மாநகராட்சிக்கு உள்ள வீடுகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நிதி திரட்டினர்.
5 மணிநேரத்தில்11 லட்சம் நிதி சேர்ந்தது, இப்பணம் ஜெயன் பெயரில் வங்கிக் கணக்கில் போடப்பட்டது.
அடுத்த மாதம் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.