
கத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை பிற அரபு நாடுகள் விரும்பவில்லை. இதுபற்றி தொடர்ந்து அந்நாடுகளும் அதிருப்தி தெரிவித்து வந்தன. இந்த நிலையில் சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன், அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகளும் நேற்று காலை கத்தாருடன் கொண்டிருந்த தூதரக உறவை திடீரென துண்டித்துக் கொண்டன.
கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் இந்த நாடுகள் அறிவித்தன.
மேலும், தற்போது ஏமன் நாட்டில் தனது தலைமையிலான கூட்டுப் படையில் இணைந்து செயல்பட்டு வரும் கத்தார் ராணுவம் கழற்றிவிடப்படும் என்றும் சவுதி அரேபியா கூறியது. இவை தவிர, இந்த ஐந்து நாடுகளும், கத்தாருடன் கொண்டுள்ள வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை துண்டிக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளன. 5 நாடுகள் வரிசையில் லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் இணைந்தது. கத்தார் உடனான உறவை 7 நாடுகள் துண்டித்து உள்ளன. இது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தூதரக உறவை துண்டித்த அரபு நாடுகள் உடனான பிரச்சனையை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது என கத்தார் கூறிஉள்ளது.
அல்-ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய கத்தார் வெளியுறவுத்துறை மந்திரி சேக் முகமது பின் அப்துல்ரகுமான் அல் தானி,
கத்தார் மன்னர் தமிம் பின் ஹமாத் அல்தானியிடம் பேசிய குவைத் ஆட்சியாளர், இப்போது எழுந்து உள்ள நெருக்கடி தொடர்பாக செவ்வாய் இரவு வரையில் பேசுவை நிறுத்துங்கள் என கேட்டுக் கொண்டு உள்ளார். கத்தார் மன்னருக்கு அழைப்பு விடுத்த குவைத் மன்னர், பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் வேண்டும் என கூறினார் என்றார். மேலும் அப்துல் ரகுமான் அல்தானி பேசுகையில் உறவுகளை துண்டித்துக் கொண்ட நாடுகள் கத்தார் மீது அவர்களுடைய சொந்த கருத்தை திணிக்க முயற்சிக்கின்றன அல்லது கத்தாரின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றன என குறிப்பிட்டு உள்ளார்.
அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று ஆகும். இங்குதான் 2022–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்க இருக்கின்றன. அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளம் கத்தாரில் உள்ள அல் உத்தெய்த் நகரில் அமைந்து இருக்கிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் உள்ளனர்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.