சவுதி அரேபியாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை மருத்துவருமான அப்துல்லாஹ் அல் ரபீயாஹ் அவர்கள் 1990 ஆம் ஆண்டு முதல் இதுவரை 42 ஜோடி ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து சாதனை செய்துள்ளார். தனது பணிகள் மனநிறைவை தருவதாக பெருமிதம் கொள்ளும் மருத்துவர் அப்துல்லாஹ் அல் ரபீயாஹ் தனது பசுமையான நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
1990 ஆம் ஆண்டு டிசம்பரில் முதன்முதலாக சவுதி இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்தார் அதன் பின் 1992 ஆம் ஆண்டு அதேபோன்றதொரு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சிக்கல் நிறைந்த சூடானிய குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மிகக்கடினமானதாக இருந்தது என்றும் 18 மணிநேரம் ஆபரேசன் நடந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, மலேஷியா இரட்டையர்களான அஹ்மது மற்றும் முஹமது ஆகியோருக்கான அறுவை சிகிச்சைகள் இதற்கு முன் மலேஷியா மற்றும் பிரிட்டன் மருத்துவர்களால் முயற்சி செய்யப்பட்டு முடியாது என அப்துல்லாஹ் அல் ரபீயாஹ்விடம் வந்தவை. இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை 23.30 மணிநேரம் நீடித்ததாம்.
அதேபோல் சுமார் 10 வருடங்களுக்கு முன் போலாந்து நாட்டு இரட்டையர்களான டாரியா மற்றும் ஓல்கா கோலக்ஸ் ஆகியோருக்கான அறுவை சிகிச்சை முயற்சிகள் கூட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மருத்துவர்களால் கைவிடப்பட்டு டாக்டர் அப்துல்லாஹ்விடம் வந்தவையே.
இன்று அவர்கள் தனித்தனி சுதந்திரச் சிறுமிகளாக வளர்ந்துள்ள நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களை சந்திப்பதற்காக மறுபடியும் சவுதிக்கு வந்ததையும், அவர்கள் சந்திக்கும் வேளையில் நன்றியுணர்ச்சி தளும்பியவாறு டாக்டரை ஓடிவந்து கட்டியணைத்து கண்ணீர் சிந்தி தங்களது அன்பை பரிமாறிக் கொண்ட நிகழ்வை நினைத்துப் பூரிக்கின்றார், மேலும் இந்த சந்திப்பின் வீடியோ பதிவு உலகளவில் யூடியூப்பில் மிக மிக அதிகமாக பகிரப்பட்ட ஒன்றாகவும் அமைந்தது.
சுமார் 25 வருடங்கள் இத்துறையில் வியத்தகு பல சாதனைகள் செய்துள்ள நிலையில், மிக விரைவில் பணி ஓய்வுபெறவுள்ள டாக்டர் அப்துல்லாஹ் அல் ரபீயாஹ் அவர்கள் தனக்குப்பின்னும் இச்சேவை தொடர்ந்திடும் வகையில் இளம் மருத்துவர்கள் பலருக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.