போனால் நான்கு ஐந்து சொட்டு தான் வருகிறது. சிறுநீர் வராவிட்டாலும் வருவது போல் உணர்வு ஏற்படுகிறது.
நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது.
சில சமயங்களில் சிறுநீர் கழித்து விட்டு, பாத்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
தலைவலி, கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலி, கால்களின் பின் பக்கம் வலி உள்ளதா என்று கேட்டதற்கு , ஆமாம் சார் இதெல்லாமே இருக்கு, நானே சொல்லலாம்னு இருந்தேன்.
நீங்களே கேட்டு விட்டீர்கள் என்றார். உங்களுடைய சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும் போது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பீர்களா..? என்று கேட்டதற்கு ஆமாம்…..ஆமாம்….என்றார்.
பெண்களே இப்போது அறிந்து கொள்ளுங்கள் இயற்கைக்கு மாறாக நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களையே பாதிக்கும்.
சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும் போது சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் மணிக்கணக்காக சிறுநீரைக் தேக்கி வைக்கும் பழக்கம், உங்கள் சிறுநீர்ப்பையைப் பாதிக்கும்.
பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் இது போன்ற சிறுநீரை அடக்கி வைக்கும் செயலால் உங்கள் சிறுநீர்ப்பையைப் பாதித்து அது சிறுநீரைத் தாங்கி நிற்கும் சக்தியை இழந்து விடுகிறது.
(ஆண்கள் அதிக நேரம் அடக்கி வைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
ஆண்கள் போல் பெண்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதைக் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்).
நாற்பது வயதை நெருங்கும் போது இந்த பிரச்னை உங்களை பாடாய்ப் படுத்தும்.
சிறுநீர் வருவது தெரியாது, ஆனால் அடிக்கடி போகும். இருமினால், சிரித்தால், தும்மினால் , வண்டியில் போகும் போது, வண்டி குண்டு குழியில் ஏறி இறங்கினால் சிறுநீர் தானாகவே வெளியேறிவிடும்.
சிறுநீர்ப்பை தன் இயல்பான தன்மையை இழந்து விடுவதால் தலைவலி முதல் முதுகுவலி எல்லா வலிகளும் வரத்தான் செய்யும் நீங்கள் வலிக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வலியானது தற்காலிகமாக குறையும். நிரந்தரமாய்க் குணமாகாது.
சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட சக்திக் குறைபாட்டை மருந்தில்லா மருத்துவமான அக்கு பஞ்சர் தொடு சிகிக்சை மூலம் மிகவும் எளிதாகச் சரி செய்து விடலாம். சிறுநீர்ப்பை தன் பழைய நிலைக்கு திரும்பியதும் இந்த வலிகள் எல்லாம், வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
இயற்கைக்கு மாறாக நாம் எதைச் செய்தாலும் அது இடியாய் இறங்கி, நம்மைத் தான் தாக்கும்.
பசித்த பின் உணவு, தாகம் எடுத்த பின் தண்ணீர், தூக்கம் வந்தால் தூங்கச் செல்வது, உடல் நிலை சரியில்லையென்றால் ஓய்வு, மேலும் மலம், சிறுநீர் போன்றவை கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் கழிப்பது என்று உடலின் மொழியைப் பின்பற்றினால் நோயே வராது.
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் சக்திக் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க மருந்தில்லா அக்கு பஞ்சர் தொடு சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.