இஸ்லாமிய முறைப்படி ‘தலாக்’ எனும் வார்த்தையைத் தொடர்ந்து மூன்று முறைச் சொல்லி விவாகரத்து செய்துக் கொள்ளும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கில், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முத்தலாக் முறைக்கு ஆதரவாகவும், மத்திய அரசு எதிர்ப்பாகவும் வாதிட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கின் மீதான விசாரணை வியாழக்கிழமை (இன்று) தொடங்கியது.
இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையில், குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நரிமன், யூயூ லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
அப்போது, இஸ்லாத்தில் உள்ள பலதார மணம் குறித்து விசாரணை நடத்த முடியாது என்றும், இஸ்லாத்தில் முத்தலாக் என்பது அடிப்படை உரிமையா என்பது பற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்றும், முத்தலாக் என்பது செயல்படுத்தக்கூடிய உரிமைதானா என்றும், அவ்வாறு அடிப்படை உரிமை என்ற முடிவுக்கு வரும்பட்சத்தில், அதில் உச்சநீதிமன்றம் தலையிடாது என்றும் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.