
எழுத்தாளர்களும், கலைஞர்களும் தாங்கள் பெற்ற விருதுகளை அரசிடமே திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இது
தொடர்பாக பத்திரிக்கையாளர்கள்
நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி
எழுப்பினர்.
இது தொடர்பாக அவர்
கூறியதாவது:-
“நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது
என்பதற்காக விருதுகளைத்
திருப்பித் தருவதால் ஒரு
பயனும் இல்லை.
விருதுகளை திரும்ப ஒப்படைப்பவர்கள்
நினைத்தால் ஒரு சில
நொடிகளில் இந்த விவகாரம்
தொடர்பாக அனைவரின்
கவனத்தையும் ஈர்க்க முடியும்.
அவர்களின் ஒரு கட்டுரை போதும் இந்த பிரச்சனைக்கான கவனஈர்ப்பு பெறுவதற்கு. அதனால் இந்த விவகாரத்தை அறிவிப்பூர்வமாக அணுக வேண்டும்”
“விருதுகளை திரும்பக்
கொடுப்பது அரசை அவமதிக்கும் செயல் என்பது எனது கருத்து” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,
“சகிப்புத்தன்மையின்மை என்பது இப்போது உருவானதல்ல 1947- லேயே உருவானது.
அன்று நடந்த தவறால், இந்தியா, பாகிஸ்தான்
பிளவுபட்டது.
ஒருவேளை இரு நாடுகளும் இணைந்து இருந்தால், சீனாவை விட மிகப்
பெரிய நாடாக இருந்திருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.