"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/6/16

மொபைல் போன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக இன்று வளர்ந்துள்ளது. மொபைல் போன் ஒன்றில், மிக முக்கிய உறுப்பாக அதன் பேட்டரி உள்ளது. சரியாக நாம் இதனைக் கவனிக்கவில்லை என்றால், நமக்குத் தேவையான முக்கிய வேளைகளில், இதன் மின் சக்தி காலியாகி, மொபைல் போனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியதுள்ளது. சார்ஜ் செய்தாலும், அதனைத் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தும் வகையில் சில முக்கிய செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொண்டால் தான், பேட்டரி நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நமக்கு கை கொடுக்கும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.

நீங்கள் செல்லும் இடம், உங்களுடைய மொபைல் போனுக்கான சிக்னல் கிடைக்காத அல்லது தொடர்ந்த சிக்னல் கிடைப்பதில் சிரமமான சூழ்நிலை உள்ள இடமாக இருப்பதாக உணர்ந்தால், மொபைல் போன் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இது போன்ற சூழ்நிலைகளில், உங்கள் மொபைல் போன் வழக்கத்திற்கு அதிகமான மின் சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களை எப்படியாவது பெற்றுவிட முயற்சிக்கும். அது பெரும்பாலும் தோல்வியையே தழுவும். எனவே, மொபைல் போனை இது போன்ற இடங்களில் ஸ்விட்ச் ஆப் செய்வது, பேட்டரியின் மின்சக்தி வீணாகச் செலவிடப்படுவது தடுக்கப்படும்.

அதே போல, மொபைல் போனில், காலண்டர், நோட்ஸ் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தினாலும், அல்லது ஆங்கிரி பேர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதாக இருந்தாலும், மொபைல் போனை ஏர்பிளேன் மோட் (“airplane mode”)எனப்படும் நிலையில் அமைத்து இவற்றை செயல்படுத்தலாம். இதனால், சிக்னல் தொடர்புகள் நிறுத்தப்பட்டு, மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்கள் மட்டும் இயங்கும் நிலை ஏற்படும்.
தேவைப்பட்டால் ஒழிய, மொபைல் போனில் இயங்கக் கூடிய புளுடூத், வை பி, ஜி.பி.எஸ். மொபைல் டேட்டா போன்ற அப்ளிகேஷன்களை நிறுத்தலாம். இவை தேவைப்படாமலேயே, தொடர்ந்து இயக்கநிலையில் இருந்தால், பேட்டரியின் திறன் வீணாகும்.

மொபைல் போன் திரையின் ஒளிநிலையை (brightness) குறைத்து அமைக்கவும். பெரும்பாலான போன்களில், இதற்கென “auto” எனப்படும் தானியங்கி நிலை ஒன்று தரப்பட்டிருக்கும். பலர், இதனைச் செயல்படாத தன்மையில் வைத்து, ஒளிநிலையை அதிகமாக்கி வைப்பார்கள். இது தேவையற்றது. இதற்குப் பதிலாக, மிகவும் குறைத்து செட் செய்திடலாம். அதனை செட் செய்திடும் இட த்தில், ஒரு ஸ்லைடிங் பார் ஒன்று தரப்பட்டிருக்கும். இந்த கோட்டினை இழுத்து அமைக்கும்போதே, தோன்றும் ஒளி நிலை நமக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதனைக் கண்டறிந்து செட் செய்திடலாம்.

மொபைல் போன் ஒன்றின், பின்னணியில் பல அப்ளிகேஷன்கள் தானாகவே இயங்கிக் கொண்டிருக்கும். இதனால் தான், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளத்தில் நமக்கான தகவல் தரப்படும் நிலையில், மொபைல் போனுக்கு அறிவிப்பு கிடைக்கும். இது கூகுள் போன்ற அப்ளிகேஷன்களுக்கும் பொருந்தும். ஆனால், எப்போதோ வரப்போகிற தகவலுக்காக, எப்போதும் தயார் நிலையில், இது போன்ற அப்ளிகேஷன்களைப் பின்னணியில் இயக்கத்தில் வைத்திருப்பது, நம் மொபைல் போன் பேட்டரியின் திறனை வீணடிக்கும். எனவே, தேவைப்படும்போது மட்டும், இந்த அப்ளிகேஷன்களை இயக்குவது நல்லது.

பேச்சு இல்லாமல், வேறு சில இயக்கங்களை நாம் மொபைல் போனில் அவ்வப்போது மேற்கொள்கிறோம். சிலர் மிக அதிகமாகவே மேற்கொள்வார்கள். இணையத்தில் உலா வருதல், கேம்ஸ் விளையாடுவது, கேமரா பயன்படுத்தி போட்டோ எடுப்பது போன்றவை இதில் அடங்கும்.

குறிப்பாக போட்டோ எடுப்பது, அதிகமான மின் சக்தியை எடுத்துக் கொள்ளும்.
ப்ளாஷ் பயன்படுத்துவது இதில் மிக அதிக மின்சக்தியை எடுக்கும் ஒரு செயல்பாடாகும். இவற்றைக் கூடுமானவரை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர், இவற்றை செயல்படா நிலையில் ஆப் செய்து வைக்க வேண்டும். கேமரா சாதனம் போன்றவற்றின் இயக்கத்தை ஆப் செய்த சில விநாடிகளிலேயே மீண்டும் ஆன் செய்வது, அதிகப்படியான மின் சக்தியைப் பயன்படுத்தும். எனவே, ஒருமுறை ஆப் செய்த இந்த அப்ளிகேஷன்களை, சிறிது கால இடைவெளி விட்டுத்தான், மீண்டும் ஆன் செய்திட வேண்டும்.

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களில், இந்த ஒவ்வொரு அப்ளிகேஷனும் எவ்வளவு மின் சக்தியைப் பயன்படுத்துகிறது என்பதனைக் காணலாம். அதை அடிக்கடி பார்த்து, பின்னணியில் வீணே இயங்கும் அப்ளிகேஷன்களை நிறுத்தலாம்.

பேட்டரியின் பவர் மிகவும் குறைவாக இருக்கும்போது, அதனை ரீ சார்ஜ் செய்திடும் நேரம் வரை, பேச்சுக்களை அளவோடு வைத்துக் கொள்ளவும். இல்லை எனில், முக்கியமானவர்கள் அழைக்கும்போது, நம் மொபைல் போன் பேட்டரியில், பவர் இல்லாமல் போய்விடும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.