"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/4/17

சவுதியில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி பல்லாயிரக்கணக்கான இந்தியர்களும் நாடு திரும்பவுள்ளனர். இவர்களில் பலர் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளர்களே அதிகம்.

இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்தி நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு சிறப்பு விமான கட்டணத்தில் 50% சலுகையை ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை மேலாளர் குந்தன் லால் அறிவித்துள்ளார். அதன்படி, ஜித்தா, ரியாத் மற்றும் தம்மாமிலிருந்து டெல்லி செல்லும் பயணிகள் 659 சவுதி ரியால்களும் மற்ற இந்திய விமான நிலையங்களுக்கு செல்ல 595 சவுதி ரியால்களும் செலுத்தினால் போதும்.

ஜித்தா மற்றும் ரியாத்திலிருந்து 40 கிலோ பேக்கேஜூம், தம்மாமிலிருந்து 30 கிலோ பேக்கேஜூம் உடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த சலுகை கட்டண விமான டிக்கெட்டுகளை எந்த டிராவல் ஏஜென்ஸியிடமும் இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ள அவசரகால வெளியேற்று சான்றிதழ் (Emergency Certificate) அல்லது சவுதி பாஸ்போர்ட் துறையால் வழங்கப்பட்டுள்ள இறுதி வெளியேற்று விசாவை (Final Exit Visa) காண்பித்தோ பெற்றுக் கொள்ளலாம்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இந்த சலுகை அறிவிப்பை பல்வேறு இந்திய சமூக தொண்டு நிறுவனங்களும் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளன.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.