
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 45 கிமீ ற்கு இந்த சேவையை தர இருக்கிறார்கள். முதல் கட்டமாக கோயம்பேடு ஆலந்துர் இடையே 10 கிமீ தூரத்திற்கு இதனை அறிமுக படுத்துகிறார்கள். இது அக்டோபர் இறுதியில் வர இருக்கிறது. இதற்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் நேரத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டமிட்டு உள்ளதால் , அதன் தண்டவாளங்கள் தரமானவையாக இருக்க வேண்டும். இதனை செய்யும் பணி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இவை 1.435 இடைவேளி கொண்ட தண்டவாளங்கள்.
ஒரு மீட்டர் தூரத்திற்கான தணடவாளத்தின் எடை 52 கிலோ இருக்கும் ,ஆனால் இவை 60 கிலோ ஆகும். இரட்டை பாதையில் 230 கிமீ நீளத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கபட உள்ளது .60 கிமீ நீளத்திற்கு தேவையான தண்டவாளங்கள் வந்து விட்டது.மற்றதை விட இதன் விலை 20 சதவீதம் அதிகம் ஆகும் , ஆயுள் காலமும் இரு மடங்கு அதிகம் ஆகும்.
மெட்ரோ வந்த பிறகாவது டிராபிக் குறைகிறதா என்று பார்ப்போம்
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.