"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/4/17

ஏமன் நாட்டில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை தடுக்கப்படவேண்டிய காரணிகளால் இறப்பதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரத்துறையான OCHA தகவல் தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அடைப்படையில் உதவி தேவைப்படுகின்றது. அவர்களின் எண்ணிக்கை 19 மில்லியன் ஆகும். இதில் 10 மில்லியன் யெமன் நாட்டின் மக்கள் உடனடி உதவியை எதிர்நோக்கி உள்ளனர். 8 மில்லியன் மக்கள் தொகைக்கும் அதிகமானோர் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். முழுமையான துப்புரவு இன்றி சிரமத்திற்கு உள்ளாவதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.

12 மில்லியன் மக்களின் உடனடி தேவையை நிறைவேற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 2.1 பில்லியன் திரட்டுவதற்கு சர்வதேச முறையீடு செய்ததில் 15 % மட்டுமே உதவி செய்யும் வகையில் நிதியை பெற்றுள்ளது. OCHA ஏமன் நாட்டு மக்களின் மனிதாபிமான அடிப்படையில் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஒரு நிதி திட்டம் நிறைவேற்றும் நிகழ்ச்சி ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது.

அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டியர்ஸ் முன்னிலை வகிப்பதாக OCHA செய்திகள் வெளியிட்டு உள்ளது.


Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.