"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/11/16

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியான பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவால் காலமானார், இவர் மறைந்தாலும் இவரது வாசகங்கள் என்றும் அழியா புகழ்பெற்றவை

புரட்சி என்பது ரோஜாக்களால் ஆன மெத்தை அல்ல. அது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையேயான போராட்டம் - 1959.

எனது தாடியை சவரம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. தாடி எனக்கு பழக்கமாகிவிட்டது. இந்தத் தாடி என் மீது இத்தேச மக்களுக்கு நிறைய கற்பிதங்களைக் கொடுத்திருக்கிறது. நல்லாட்சிக்கான வாக்குறுதியை நிறைவேற்றும்போது எனது தாடியை சவரம் செய்து கொள்வதாக இருக்கிறேன் - 1959.

நான் குற்றவாளி என்று தீர்ப்பளியுங்கள். அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. ஏனெனில், வரலாறு என்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கும் - 1953.

பாலியல் தொழிலாளர்களையும் கல்லூரி பட்டதாரிகளாக்கியதே புரட்சியின் எனது புரட்சியை 82 ஆதரவாளர்களோடு தொடங்கினேன். இப்போது மீண்டும் புரட்சியை தொடங்க வேண்டும் என்றால் 10 அல்லது 15 ஆதரவாளர்களுடன் தன்னம்பிக்கையை துணையாகக் கொண்டு ஆரம்பிப்பேன். ஏனெனில் உங்கள் இலக்குக்கான எதிர்கால திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், நம்பிக்கை இருந்தால் சிறு படைகூட புரட்சிக்கு வித்திடும் - 1959.

அமெரிக்காவுக்கு எதிரான யுத்தமே எனது உண்மையான எதிர்காலம் என நான் உணர்ந்திருந்தேன் - 2004.

உண்மையின் பக்கம் நாம் சார்ந்திருத்தல் அவசியம். எளிமையாக சொல்ல வேண்டுமானால் சோஷலிச கூடாரம் சரிந்தது- 1991.

ஆண்டுகள் பல கடந்துவிட்ட பிறகு நான் ஓர் இறுதி முடிவுக்கு வந்துள்ளேன். நாம் இதுநாள் வரை செய்த பிழைகளிலேயே மிகப் பெரியது சோஷலிசத்தை கட்டமைக்கத் தெரியும் என யாரோ கூறியதை நம்பியதே. எப்போதெல்லாம் 'இதுதான் சூத்திரம்' என அவர்கள் சொன்னபோதெல்லாம் அவர்கள் அதை புரிந்து உணர்ந்து சொல்கிறார்கள் என நம்பினோம். ஒரு மருத்துவரின் வார்த்தைகள் மீதான நம்பிக்கை போன்றது அது. - 2005.

எனக்கு 80 வயதாகிவிட்டது. உண்மையாகவே மகிழ்கிறேன். இது சாத்தியமாகும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஏனெனில் உலகில் ஒரு மாபெரும் சக்தியை அண்டை நாடாகக் கொண்டிருந்தோம். அதுவும் அந்த நாடு என் கதையை முடிக்க எப்போதும் ஆயத்தமாயிருந்தது. - 2006.

கியூப அதிபராகவோ அல்லது படைத் தளபதியாகவோ ஆக வேண்டும் என நான் ஆசைப்பட மாட்டேன். ஏன் அந்த வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டாலும் ஏற்க மாட்டேன். அவ்வாறு நான் செய்தால் அது என மனசாட்சிக்கு செய்யும் துரோகம். அந்தப் பதவிகளை வகிக்க மிக அதிகமான செயலாற்றலும், அர்ப்பணிப்பும் தேவை. ஆனால், என் உடல்நிலை இப்போது இருக்கும் நிலையில் அந்த அர்ப்பணிப்பு சாத்தியமற்றது- 2008.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.