"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/3/16

ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் நடைபயிற்சி நமது ஆயுட்கால நீட்டிப்புக்கும் உறுதுணையாக உள்ளதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 50-79  வயதுக்குட்பட்ட சுமார் 3 ஆயிரம் பேரின் உடல்களில் கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன. உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி தொடர்பான அவர்களின் செயல்பாடுகள் அமெரிக்காவில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் பதிவாகி வந்தன.

பின்னர், எட்டாண்டுகள் கழித்து அவர்களில் எத்தனைபேர் உயிருடன் உள்ளனர்? என்று ஆய்வு நடத்தியதில் அதிகமாக நடைபயிற்சி மேற்கொள்ளாத சிலர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், நடைபயிற்சியை தொடர்ந்து மேற்கொண்ட பலர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, அன்றாடம் பத்து நிமிடங்களுக்கு கை,கால்களை வேகமாக அசைத்து மிதமான நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் அதிக காலம் உயிர் வாழலாம் என தெரியவந்துள்ளது.

மேலும், வேலை ஏதுமின்றி சோம்பி உட்கார்ந்திருப்பவர்கள் தரையை சுத்தம் செய்வது, குதிப்பது, நடப்பது, தோட்டவேலை செய்வது, ஓவியம் வரைவது போன்ற ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பது நல்லது எனவும் அறிவுரைக்கப்பட்டுள்ளது.

மிகக்கடினமான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் கிடைக்கும் உடல்நலம் சார்ந்த பலன்களைவிட இதைப்போன்ற மிதமான நடைபயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்கள் அதிகமானவை, நிரந்தரமானவையும்கூட என இந்த ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.