"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/7/14

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...!

'சமூக வலைதள சட்ட உதவி மையம்' என்ற அமைப்பின் சார்பில், சென்னையில் வருகின்ற 13-07-2014 (ஞாயிற்றுகிழமை) அன்று , முகநூல் நண்பர்கள் சந்திப்பு- 'இப்தார்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முகநூல் நண்பர்க
ள் சந்திப்பு (இப்தார்) நிகழ்ச்சியின் நோக்கங்கள் :

# மத்தியில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்துக்குப்பின், சமூக வலைதளங்களின் கருத்துரிமைகள் பறிக்கப்படுமோ என்ற அச்சம் பரவலாக உள்ளதை கருத்தில் கொண்டு,
முஸ்லிம் சமூகத்தின் முகநூல் பதிவர்களை 'சைபர் கிரைம்' உள்ளிட்ட அரச பயங்கரவாத மிரட்டல்களிலிருந்து பாதுகாப்பது.

# கருத்து சுதந்திரங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பது.

# பாதிக்கப்படும் நபருக்காக போராடுவது, வழக்குகளிலிருந்து அவர்களை பாதுகாப்பது. 

# இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி பதிவிடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரம், நம் சமுதாய பதிவர்களையும் நெறிப்படுத்துவது.

# ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது, சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வுகளை விதைப்பது, காவிகளுடன் 'சரிக்கு சரி சண்டை' என்ற பெயரால், அவர்களைப் போல நாமும் வரம்பு மீறி எழுதுவதை மட்டுப்படுத்துவது.

# நம் அமைப்பில் அங்கம் வகிப்பவர்கள், எந்த இயக்கத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம், தனித்தனியே 'பக்கம்' நடத்துபவர்களாக, தனிப்பட்ட பதிவர்களாகவும், அவரவர் கருத்துக்களின்படி செயல்படலாம்.

# பாதிப்பு என்று வரும்போது, நமது அமைப்பில் அங்கம் வகிக்காதவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு பக்கபலமாக இருந்து, ஒன்றுபட்டு செயல்படுவது. 

# அதிகார வர்க்கத்தின் மூலம் நமக்கிழைக்கப்படும் தீங்குகள், மற்றும் நமது எதிரிகள் குறித்து விமர்சிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துதல்.

# ஆட்சியாளர்களை, நாம் எந்த வரையறுக்குள் விமர்சிக்க முடியும் என்பதை, கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தோரை, எதிர்கட்சியாய் இருந்தோர் விமர்சித்த முறைகள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

# நமது சமூக வலைதள பயிலரங்க நிகழ்ச்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் பொறுப்புக்கள் வகிக்காத அறிவு ஜீவிகள் மூலம் நடத்தப்படும். 

# அனைத்து இயக்க இஸ்லாமிய தலைவர்களையும், இயக்கங்களையும், நாம் மதித்து செயல்படும் அதேவேளையில், 'சமூக வலைதள சட்ட உதவி மையம்' எந்த இயக்கத்தையும் சாராத அமைப்பாகவே செயல்படும்.

# தேவைப்படும்போது, இயக்க தலைவர்களின் ஆலோசனைகள்-அறிவுரைகள் பெற்று செயல்படும் அதேநேரம், எந்த ஒரு இயக்கத்தின் சார்பு இயக்கமாகவோ துணை அமைப்பாகவோ இது இருக்காது.

# தமிழகத்தில் வசிக்கக்கூடிய, குறிப்பாக சென்னையில் தேவைப்படும்போதெல்லாம் ஒன்று கூடும் வாய்ப்புள்ளவர்கள், மற்றும் தமிழகத்தின் எப்பகுதிக்கும் சென்று செயல்பட முடிந்தவர்கள் மட்டுமே இதன் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

# களப்பணியாற்ற வாய்ப்பில்லாத சகோதரர்கள், வெளிநாடுவாழ் அன்பர்கள் ஆலோசகர்களாக இருந்து ஆதரவளிப்பார்கள்.

தங்களின் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

முன்பதிவு செய்யும் வருகையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே நிகழ்ச்சிக்கான 'ஹால்' ஏற்பாடு செய்யவேண்டியுள்ளதால், விரைவாக தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். 




தொடர்புக் கொள்ள வேண்டிய எண்கள் :

9380945727 -ஜாகிர் ஹுசைன்.
9600430015 -அப்துல் அஜீஸ்

குறிப்பு : 
வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு 'சஹர்' ஏற்பாடு உண்டு.


தகவல் : ஜாகிர் ஹுசைன்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.