.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/3/14

நம்மில் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை வந்து இரு‌க்கு‌ம். ஆனா‌ல் பெரும்பாலானோர் மெடிக்கல் ஷாப் அல்லது அண்ணாச்சிக் கடைக்கு போய் வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌லும் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம். மாணவ‌ர்களு‌க்கு ‌வரும் தலைவ‌லிக்கு அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம்.க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். அதே சமயம் கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். ‘டாக்டர்களால் க்ளாக்கோமா எனப்படுகிற இத்தகைய கண் நீர் அழுத்த நோய்’என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், இந்த ‘க்ளாக்கோமா’ இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோரையும் பாதிக்கிறது இந்தப் பிரச்னை.

மன அழுத்தத்தினால் உடல்நலம் பாதிக்கப்படுவது இயற்கை. ஆனால் கண்ணில் ஏற்படும் கண் அழுத்தத்தினால் பார்வை நரம்பு பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இப்பிரச்சினைக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பை சரி செய்வது கடினம் என்கின்றனர் மருத்துவர்கள். பார்வை நரம்பை பாதித்து முற்றிலும் கண்களின் செயல்பாட்டை இழக்கச் செய்வது குளுகோமா என்று சொல்லப்படும் கண் நீர் அழுத்த நோய்.
கண்ணின் செயல்பாட்டிற்கு உதவும் திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இந்நோய் உண்டாகிறது. இந்த திரவ அழுத்தமானது நாளடைவில் பார்வை நரம்பின் முனைகோடி பாகங்களை செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் உண்டு. எனவே நாற்பது வயதுக்கு மேல் கண்ணை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். உலக அளவில் பார்வை இழப்பிற்கான முக்கிய காரணங்களில் கண்நீர் அழுத்த நோய் மூன்றாம் இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 8 கோடி மக்களுக்கு இந்நோய் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர 87 லட்சம் பேர் இருபக்க வாட்டிலும் பார்வை இழப்பிற்கு உள்ளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வயதானவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளையும், கண்நீர் அழுத்த நோய் குறி வைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நோயை ஆரம்பத்திலேயே அறிகுறிகளைப் புரிந்து கொண்டு சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பை சரி செய்ய முடியாது என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை. எனவே வந்தபின் தீர்க்க முடியாத கண்நீர் அழுத்த நோயை வருமுன் காப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.