1/10/16

சர்வதேச நாடுகள் அமைதிகாக்கும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தும் அறபு நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா.வின் 71 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்டார் அமீர் ஷெய்க் ஹமீத் அஸ்ஸானி தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதவளித்து வருகின்றன. இதனால், 70 ஆண்டுகளாக பலஸ்தீனர் களின் நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மௌனமாக அங்கீகரிக்கப் படுகின்றது. 7 தசப்தங்களாக நீதியை வேண்டி நிற்கும் இந்தப் பிரச்சினை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பாரபட்சமாக கையாளப்படுகின்றது.

மேற்குக்கரையிலும் ஜெரூசலத்திலும் இஸ்ரேலின் சட்டவிரோதக் குடியேற்றத் திட்டங்கள் தொடர்கின்றன. இதுவரை இஸ்ரேலை எதிர்த்து பாது காப்புச் சபையினால் வெளியிடப்பட்ட எந்தத் தீர்மானமும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.