.

.

.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/1/17

அஸ்ஸலாமு அலைக்கும் 

அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்(2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகிறான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

உம்ரா பயணம் புனிதப் பயணமாகும் இது சுற்றுலாப்பயணமல்ல என்பதை முதலில் எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.
அது மாத்திரமின்றி ஹஜ் மற்றும் உம்ரா கடமைகள் இடங்களோடு சம்பந்தப் பட்டவையாகும். இந்த தகடமையை நிறைவற்ற எமது நாட்டிலிருந்து செல்வது மிகவும் கடினமான அல்லது செலவுத்தனமிக்க ஒன்றென நாம் புரிந்து வைத்துள்ளோம். அதனாலேயே முகவர்களையும் வழிகாட்டிகளையும் தேடியலைய வேண்டியுள்ளது.

மார்க்கம் என்ற பெயரில் நடக்கும் ஆயிரமாயிரம் பித்அத்களும் பித்தலாட்டங்களும் அதிகரித்துள்ள இந்த காலப்பகுதியில் வியாபாரங்களாகவும் ஒரு சில மார்க்க விடயங்கள் மாறிப்போய்விட்டன என்பது யாரும் மறுத்திடாத உண்மை. நாம் நம்மை திருத்திக் கொள்ளாதவரை இந்த பிடியிலிருந்து மீளமுடியாது. இப்படியான ஒருவியாபரங்களில் ஒன்றுதான் உம்ரா புனிதப்பயணம் ஆகும்

இந்தியாவில் நுாற்றுக்கணக்கான முகவர்களும் அதன் சப் ஏஜெண்ட் களும் வழகாட்டி எனும் மௌலவிமார்களும் இருக்கின்றார்கள். இவர்கள் இந்த வியாபாரத்தை வசதி செய்வது எப்படியென்றால்,

தலைசிறந்த 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிடம், இருக்கை, சாப்பாடு, குறைந்த விலை, ஹரமுக்கு பக்கத்தில் ஹோட்டல் வசதி, முக்கிய இடங்களை பார்க்க செல்லுதல் இன்னும் பல... என்றுதான். 

உண்மையில் புனித யாத்திரை செல்வதற்கு ஏன் இவ்வளவு சொகுசு வசதி அல்லாஹ்வுக்காக செல்கிறோம். நட்சத்திர ஹோட்டலில் தங்க செல்லவில்லை, இதுவெல்லாம் எதற்காக இது பாரிய மாபியா வியாபாரம் கமிசன் வியாபாரம் எல்லாவற்றிலும் கைவத்த எம்மவர்கள் மார்க்கத்திலும் கைவைத்து விட்டனர். உம்ரா  என்பது 
1.கிட்டத்தட்ட 4 மணி நேர அமல், 
2.நிய்யத்துடன் இஹ்றாம் கட்டி தவாப் செய்து சபா மர்வா தொங்கோட்டம் ஓடி முடி கத்தரித்தல் இவ்வளவும்தான் இதற்கு எதற்கு இந்த வீன் விளம்பரங்கள்.
 காரணம் இது ஒரு வியாபாரம் உம்ரா பரவாயில்லை ஹஜ்ஜில்தான் அதி்ல் லாபமாம் காரணம் அவ்வளவு மோசடி மினாவில் தரிப்பது என்று சொல்லி அசீசியாவி்ல் தங்குவது போன்ற மோசடி செயல்கள். மார்க்கத்தில் இல்லாதவற்றை செய்ய சொல்லுதல் கூட்டிச் சென்ற பிறகு அங்கு பித்தலாட்டம் முடி கத்தரிப்பதில் இருந்து பேரித்தம்பழம் வாங்கும் வரைக்கும் கமிசன் வியாபாரம் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

பொறுப்புள்ள அதிகாரிகள் இது குறித்து கவனம் எடுங்கள், அல்லாஹ்வுக்காக இந்த கமிசன் வியாபாரத்திலிருந்து எமது சமூகத்தை பாதுகாப்போம் கண்ணியமிக்க உலமாக்கள் குறைந்த செலவில் ஒரு ஏழை உம்ராவுக்கு செல்லக்கூடிய வழியை வகுக்க திட்டமிடுவோம். நல்லதை செய்வோம் இறையருள் பெறுவோம்.
இன்ஷா அல்லாஹ் துஆ செய்வோம் 
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.