இந்திய அரசு அண்மையில் 500, 1000 ரூபா தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தமை அறிந்ததே. அந்த வகையில் பழைய 500, 1000 ரூபா தாள்களை புதிய நாணய தாள்களாக மாற்றிக் கொள்ள டிசம்பா் 30 திகதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது.
கத்தரில் உள்ள 6.5 இலட்சம் இந்தியா்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபா தாள்களை புதிய நாணயத்தாள்களாக மாற்றிக் கொள்ள எந்த ஒரு ஏற்பாட்டையும் செய்யவில்லை. கட்டாரில் மட்டும் 6.5 இலட்சம் இந்தியர்கள் 500, 1000 ரூபா தாள்களாக மில்லியன் கணக்கில் பணத்தை கட்டாரில் வைத்துள்ளதாகவும் அந்த பழைய நாணத்தாள்களைக் கொடுத்து புதிய நாணயத்தாள்களாக மாற்றிக் கொள்ள எந்த ஒரு உத்தியோக பூர்வ ஏற்பாட்டையும் இந்திய அரசாங்கம் செய்யவில்லை.
இந்த விடயம் கத்தரில் உள்ள இந்தியா்களை கடுமையாக பதிப்படையச் செய்துள்ளதாக கத்தரர் லிவிங் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகவே இந்திய அரசாங்கம் காலக்கெடுவை அதிகரிக்க வேண்டும் என்பதாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கருத்து வெளியிட்ட Doha Bank Business Development Officer Ganeshan Ramakrishnan அவா்கள் இந்திய ரிசர்வ் வங்கி கத்தரில் உள்ள எக்ஸ்சேன்ஞ்களுக்கு இந்தியர்கள் பழைய நாணத்தாள்களைக்
கொடுத்து விட்டு புதிய நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள உத்தியோக பூர்வ அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றார்.
பழைய 500, மற்றும் 1000 நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளுதல் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தகவல்களுக்காக நாம் காத்திருக்கின்றோம் என்கின்றனா்
இந்திய தூதரக அதிகாரிகள்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.